புலன்களின் ❤️ ஃபெர்ஃபோர்மன்ஸ்.
.
அனுபவத்தின் அடிப்படையில்
சொல்லக் கூடிய ஒன்று:
.
.
புதிய விடயம் ஒன்றினுள்
நுழைவதற்கு முன்னர் ...
ஏற்கனவே அதிலே இருக்கின்ற
நம்பகமான சிலரிடம் இருந்து
அதன் நன்மை தீமைகள் பற்றிய அபிப்பிராயங்களை
நடுநிலையாகக் கலந்துரையாடிக்
கேட்டறிவது நல்லது.
உதாரணம்:
சமூக வலைத்தளங்கள்.
நன்மையை விட
தீமைகள் அதிகமாக இருக்கின்ற எதிலும்
நுழையாமல் இருப்பதே நல்லது.
நுழைந்து, பாடங் கற்று
வெளியே வருவதென்பது
இங்கே பலபேருக்கு
வெகு சிரமமான ஒரு காரியம்.
மிக முக்கியமாக அதிலே
நேரம் எவ்வாறு களவாடப்படுகிறது?
இழக்கின்ற நேரத்திற்குப் பலனாக
என்ன கிடைக்கிறது?
என்பது பற்றிக் கேட்டறிதல் நல்லது.
மற்றவர் சொல்வதில் உள்ள
உண்மையை, யதார்த்தத்தைப்
புரிந்துகொள்வது மிகச் சுலபமானது.
ஆனால்,
பெரும்பாலான சந்தர்ப்பங்களில்
ஒருவரின் ஈகோ தான்
இடையிலே தடையாக இருந்து
உண்மை இதயத்தைத் தொடுவதை விட்டும்
தடுத்து விடுகிறது.
ஈகோ இன் எல்லை சுருங்கும்போது தான்
ஞானத்தின் எல்லை விரிந்து செல்கிறது.
.
.
எழுந்து நிற்கின்ற மரம்
விழுந்து கிடக்கின்ற இலை
கொழுந்து விடுகின்ற நெருப்பு
உழுந்தில் ஒழிந்திருக்கும் ஊட்டம்
பறந்து திரிகின்ற பறவை
மறந்து போகின்ற மரணம்
இறந்து போன ஓர் இளைஞன்
திறந்து மூடுகின்ற மனசு ❤️
பரந்து விரிந்த வானம்
இரவில் வராத காகம்
சுரந்து வருகின்ற கண்ணீர்
இரத்தம் தணிக்கின்ற தண்ணீர்
கயிறில் தொங்காத மேகம்
வயிறில் வளரும் சிசு
மயிரிழையில் தப்பும் உயிர்
பயிரில் சுரக்கும் ஒக்சிசன்
எதிர் பாராமல் கிடைக்கின்ற உதவி
எதிர் பார்த்துங் கிட்டாத வெற்றி
புதிர் போன்ற புது நிமிஷம்
கதிர்மேல் எழுதப்பட்ட பெயர்கள்
என்றெல்லாம் உலகில்,
பெற்றுக்கொள்ளும் ஒவ்வொன்றிலும்
கற்றுக் கொள்ளவென்று
எவ்வளவோ இருக்கின்றது.
நாம் இருக்கின்ற இடங்களில்
இதயத்திற்கு அமைதி தரவென்று
ஏதோவோன்று
இருந்துகொண்டுதான் இருக்கிறது.
கண்டுகொள்வது தான் பாக்கி.
புலன்களின் ஃபெர்ஃபோர்மன்ஸை
புத்தியின் புனிதம்
பன்மடங்காக்குகிறது.
எதற்கும்
அதற்கென்று போதுமான நேரமும் அவசியம்.
.
.
மனசு ❤️
20.02.2K22, ஞாயிறு.